*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Friday, March 8, 2013

பாது­காப்புச் செய­லா­ளர் தலை­மையில் உலமா சபை-பிக்­குகள் பேச்­சு

பாது­காப்புச் செய­லாளர் கோத­பாய ராஜ­பக்­­ஷ­வின் தலை­­மையில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா பிர­தி­நி­தி­க­ளுக்கும் பௌத்த பிக்­கு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு இன்று மாலை பாது­காப்பு அமைச்சில் இடம்­பெற்­றுள்­ள­து.

இச் சந்­திப்பில் பொது­பல சேனாவின் பிர­திநி­திகள் பங்­கேற்­க­வில்லை. மாறாக வேறு பிரி­வு­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உயர்­மட்ட பௌத்த பிக்­குகள் சிலரே பங்­கேற்­றுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­ற­து.

இச் சந்­திப்பில் ஹலால் விவ­காரம் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. இச் சந்­திப்பு சிநே­க­பூர்­வ­மா­ன முறையில் இடம்­பெற்­ற­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­ற­ன.

இதற்­கி­டை­யில் இச் சந்­திப்­புக்கு முன்­ன­தாக வர்த்­தக சமூகத்தைச் சேர்ந்­த பிர­தி­நி­தி­க­ளுடன் பாது­காப்புச் செய­லாளர் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இதன்­போது தமது உற்­பத்­தி­க­ளுக்கு ஹலால் சான்­றி­தழ் அவ­சியம் என வர்த்­தகர்கள் பாது­காப்புச் செய­லா­ள­ரி­டம் வலி­யு­றுத்திக் கூறி­யுள்­ள­­னர்.

இத­னைத் தொடர்ந்­தே உலமா சபைப் பிர­தி­நி­தி­க­ளுக்கும் பௌத்த பிக்­கு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு இடம்­­பெற்­றுள்­ளது. இச் சந்­திப்பில் பேசப்­பட்ட விட­யங்கள் தொடர்­பான தக­வல்கள் கிடைக்கப்­பெற்­றவுடன் பதி­­வேற்­றப்­ப­டும்.
Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support