சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அசாத் சாலி வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்து மற்றும் உணவினை உட்கொள்ள தொடர்ந்தும் மறுத்துவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் ஊடகம் ஒன்றிடமே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் குற்றப்புலனய்வுப்பொலிசாரினால் கைது செய்யப்பட முன்னாள் கொழும்பு மா நகர சபையின் பிரதி மேயர் அசாத் சாலி சுமார் 30 மணித்தியாலங்கள் வரையில் உணவு,நீர் உட்கொள்ளாது இருந்துவந்ததை தொடர்ந்து உடல் நிலையில் ஏற்பட்ட நலக்குறைவு காரணமாக நேற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே குறித்த வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் அசாத் சாலி மருந்து சாப்பிட மறுத்துவருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment