ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்டுள்ள பொருட்களை பகிஷ்கரிக்குமாறு குருநாகலை நகர வீதிகளில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தெரிவிக்கின்றன.
குருநாகலை எத்கந்த ரஜமகா விகாரைக்காணியில் தொங்கவிடப்பட்டுள்ள பதாதையில், ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்டுள்ள பொருட்களை குருநாகலை நகருக்குள் வருவோர் பகிஷ்கரிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த அதே வசனங்களை கொண்ட மற்றொரு பதாதை குருநாகலை -புத்தளம் பிரதான வீதியிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பதாதைகளுக்கு பெளத்த இளைஞர் அமைப்பு உரிமைக் கோரியுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறான பதாதைகள் காரணமாக அந்நகரை அண்மித்து வாழும் முஸ்லிம்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment