வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினூடாக தமிழ் மக்களுக்கு செய்தவற்றை ஜமிய்யதுல் உலமா முஸ்லிம்களுக்கு செய்ய முனைவதாக பொது
பல சேனா அமைப்பின் தலைவர் கிராம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.
ஹலால் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குருநாகலை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் பொது பல சேனாவின் தலைவரை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது கலந்து கொண்டிருந்த பொது பல சேனாவின் உறுப்பினரான டிலந்த விதானகே கருத்து வெளியிடுகையில், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தாம் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும் 30 வருட யுத்தத்திலிருந்து மீண்டுள்ள நாம் மீண்டும் அவ்வாறனதொரு சூழலை நோக்கி செல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment